News October 23, 2024
போலி என்சிசி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் வழக்கில் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
ஓசூர் விமான நிலையம்.. 2 வாரத்தில் குட் நியூஸ்

ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. பெரிகை–பாகலூர் இடையே தேர்வு செய்யப்பட்ட இந்த தளம் TAAL ஓடுபாதையிலிருந்து 15.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அடுத்த 2 வாரங்களில் மாநில அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி அனுமதி கோர உள்ளது. இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்தல் முன்மொழிவை தயாரித்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார்.
News August 25, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு & புதுமை நிறுவகம் (EDII-TN) சார்பில் பேக்கரி தயாரிப்பு பயிற்சி செப்டம்பர் 1 முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை ஈக்காட்டுதாங்கல் EDII வளாகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள கிருஷ்ணகிரி மக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். (மேலும் விவரங்களுக்கு 8072914694, 8668102600). ஷேர் பண்ணுங்க!