News October 23, 2024
பழனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

பழனியில் உள்ள கான்வென்ட் ரோட்டில் எலக்ட்ரிக் கடை நடத்தி வந்தவர் இளங்குமரன். இவரது மனைவி ரேணுகா தேவி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இன்று தாய் மற்றும் மகள் கழுத்து அறுபட்ட நிலையிலும், தந்தை தூக்கிட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல்: இளைஞர்களுக்கு வீடியோ எடிட்டிங் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு “வீடியோகிராபி மற்றும் வீடியோ எடிட்டிங்” சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் https://iei.tahdco.com/vve_reg.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News August 15, 2025
திண்டுக்கல்: ரூ.64,480 சம்பளத்தில் வங்கி கிளார்க் வேலை!

திண்டுக்கல் மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 15, 2025
திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் சுதந்திர தின விழா

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சி.சீனிவசன் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகர் முதல் மேயர் மருதராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பிரேம்குமார்,
திண்டுக்கல் மாமன்ற எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.