News October 23, 2024
விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
அத்தியூர் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றகை போராட்டம்

அத்தியூர் கிராம மக்கள், நேற்று(ஆக.18) காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர். மனுவில், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கும் தனி சுடுகாடும், பிற சமுகத்தினருக்கு ஒரு பொது சுடுகாடும் உள்ளது. பொது சுடுகாடு பகுதியில், பழங்குடி இருளர் மக்களுக்காக, அரசு சார்பில் இலவச மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுடுகாட்டில் பட்டா வழங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
News August 19, 2025
விழுப்புரத்தில் இன்று எங்கெங்கு மின்தடை (2/2)

பூத்தமேடு, சோழகனூர், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், அதனூர், ஒரத்தூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அய்யங்கோவில்பட்டு, அய்யூர் அகரம், கொய்யாத்தோப்பு, டி.மேட்டுப்பாளையம், ஆசாரங்குப்பம், எஸ்.குச்சிப்பாளையம், சாணிமேடு, விநாயகபுரம், அரும்புலி, தர்மபுரி, செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளையம், கொசப்பாளையம், அய்யனப்பாளையம் பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும்.
News August 19, 2025
விழுப்புரத்தில் இன்று எங்கெங்கு மின்தடை(1/2)

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.19) காரணைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்ட நல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், காடகனூர், வி.சித்தாமூர், சி.மெய்யூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும். <<17449011>>தொடர்ச்சி<<>>