News October 23, 2024
குமரி ஐ.டி.ஐ.யில் சேர்க்கைக்கு கால அவகாசம்

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது 31.10.2024 வரை சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 94435 79558 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
குமரி: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. கன்னியாகுமரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 13, 2025
BREAKING: குமரி படகு போக்குவரத்து திடீர் ரத்து!

கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகு போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. இன்று(ஆக.13) கன்னியாகுமரி கடலில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தற்காலிகமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. நிலைமை சீரானவுடன் பழகு போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு (இன்று ஆக.13) துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.