News October 23, 2024
4வது திருமணம் செய்த நடிகர் பாலா

நடிகர் பாலா இன்று முறைப்பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு நடக்கும் 4வது திருமணமாகும். 2010ல் பாடகி அம்ருதாவை மணந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின் 2021ல் டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். இதனிடையே, 2008ல் சந்தனா என்பவரை திருமணம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இன்று உறவினர்கள் முன்னிலையில் கோகிலாவை மணந்துள்ளார்.
Similar News
News October 27, 2025
ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் புஸ்ஸி ஆனந்த்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் புஸ்ஸி ஆனந்தின் ஜாமின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. SC-யின் தீர்ப்பின்படி, கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், எதிர்மனுதாரராக கரூர் போலீஸ் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, ஐகோர்ட்டில் தாக்கல் செய்த தனது முன் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
News October 27, 2025
சற்றுமுன்: இந்திய வீராங்கனை தற்கொலை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடிய ஜூஜிட்சு வீராங்கனை ரோகிணி கலாம்(35) ம.பி.,யில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த இவர், வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக அவரது சகோதரி ரோஷிணி தெரிவித்துள்ளார். ரோகிணி கலாம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தற்கொலை தீர்வல்ல!
News October 27, 2025
கூவி கூவி அழைக்கும் அதிமுக? செல்லூர் ராஜு பதிலடி

கூட்டணிக்கு வாங்க என்று தவெகவை கூவி கூவி அதிமுக அழைப்பதாக TTV தினகரன் விமர்சித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு, அரசியலில் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக அதிமுகவை TTV தினகரன் விமர்சிப்பதாக செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. சரியான நேரத்தில் யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை சீட் என்பது குறித்து இபிஎஸ் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.


