News October 23, 2024
போலி பாஸ் சீல் தயாரித்த அச்சக உரிமையாளர் கைது

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு போலியாக பாஸ் மற்றும் சீல் தயாரித்து மோசடி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மார்த்தாண்டத்தில் அச்சகம் நடத்தி வரும் வேதராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்ல லாரிகளுக்கு போலி பாஸ் மற்றும் சீல் தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.
Similar News
News February 17, 2026
குமரி : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
News February 17, 2026
குமரி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News February 17, 2026
குமரி: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

குழித்துறை, தென்கண்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது நேற்று ரயில் மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றினர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் பெயர் தங்கையன் (84) காட்டுப்புனம் விளை என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


