News March 18, 2024
திருச்சியில் அதிகாரிகளிடம் சிக்கிய பணம்.!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(மார்ச்.18) காலை திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 15, 2026
திருச்சி: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-II, IIA, குரூப்-IV தேர்வுகளை போட்டி தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News January 14, 2026
திருச்சி: கண் குறைபாடுகளை நீக்கும் கோயில்

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 14, 2026
திருச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.


