News March 18, 2024
திருச்சியில் அதிகாரிகளிடம் சிக்கிய பணம்.!

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று(மார்ச்.18) காலை திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 7, 2025
வகுப்பறையில் பெண்ணுடன் தங்கியிருந்த இளைஞர் கைது

லால்குடி அருகே வாளாடி மேல்நிலைப் பள்ளி வகுப்பறை ஒன்றில் நேற்றுமுன் தினம் ஆண், பெண் என 2 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் கண்டித்தபோது, அந்த இளைஞர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, வகுப்பறையில் இருந்த கீழவாளாடியைச் சேர்ந்த நவீன்குமாரை (28) கைது செய்தனர்.
News April 6, 2025
சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு நினைவு மண்டபம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமாக சுபத்ரா யானை இருந்தது. திருவிழா காலங்களில் இந்த யானை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்து விட்டது. சட்டமன்ற அறிவிப்பின்படி கோயில் நிர்வாகம் யானைக்கு சுமார் ரூ.49.50 லட்சத்தில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. இதனை அறங்காவலர் குழுத்தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
News April 6, 2025
அங்கன்வாடி பணியாளர்: விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 17 அங்கன்வாடி பணியாளர், 17 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 262 அங்கவாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. எனவே இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்… SHARE NOW!