News October 23, 2024
மழை நேர மின் பாதிப்பா?உடனே இதை செய்யுங்க!

மதுரையில் வடகிழக்கு பருவமழையில் மின்தடை, மின்பாதையில் மரம் விழுவது, மின்கம்பி அறுந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது நிகழ்ந்தால் உடனே சரிசெய்ய 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணாபுரம் காலனி- 94458 52932, அண்ணா நகர்-94458 52850, உத்தங்குடி- 94458 52851, பனங்காடி- 94458 52855, அழகர்நகர்- 94458 52847, சிந்தாமணி- 94458 52939, திருநகர்- 94458 52957 ஆகிய அலைப்பேசி எண்களில் புகார் அளிக்கலாம்.
Similar News
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <
News August 19, 2025
காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.
News August 19, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.