News October 23, 2024

அரசு ஐடிஐயில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், பயிற்சியாளர்கள் சேர்க்கை 2024 கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர் தங்களது சான்றிதழ்களுடன் 18.10.2024 முதல் 30.10.2024 ஆம் தேதி வரை விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

Similar News

News August 14, 2025

இந்திய அளவில் கால்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

image

அகில இந்திய அளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் சப்-ஜூனியர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் T. பிருந்தா, S. கானப்ரியா, k. கீர்த்தனா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

News August 14, 2025

திருவாரூர் வருகை தரும் குடியரசு தலைவர்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 10வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு முனைவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

News August 13, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!