News October 23, 2024
எங்களுக்கு ₹750 கோடி Loss: சாம்சங்

தொழிலாளர்கள் போராட்டத்தால் ₹750 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரிய விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிய சங்க நிர்வாகி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை வந்த நிலையில், நிறுவன நடவடிக்கையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது என அந்நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
Similar News
News August 12, 2025
மூட்டு எலும்புகளை வலுவாக்கும் ‘தடாசனா வின்யாசனம்’

✦இது முதுகெலும்பை சீராக வைக்கவும், தோள்கள், இடுப்பு & முழங்கால்கள் எலும்புகளை வலுவாக்கும்
✦கால்களை ஒன்றாக சேர்த்து, கைகளை உடல் ஒட்டியபடி வைக்கவும். கைகளை ‘T’ வடிவில் உயர்த்தவும்.
➥கால்களை கொஞ்சம் வளைத்து, இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து நிற்கவும்.
➥10- 15 விநாடிகள் இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News August 12, 2025
தேமுதிகவின் கூட்டணி கணக்கு.. சீட் பேரம்..

ஜெ.,வுடன் தான் இருக்கும் புகைப்படத்தால் பரபரப்பு தொற்றியதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக தற்போது இல்லை என்று பிரேமலதா விளக்கமளித்தார். ஆனால், எல்.கே.சுதீஷ் போட்டோவை வெளியிட்டதற்கு பின்னால், அரசியல் காரணம் இல்லாமல் இல்லை. அதிமுகவின் கதவு திறந்து இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி, திமுக அல்லது தவெகவிடம் கூடுதல் சீட் பேரம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
News August 12, 2025
ஆசிய கோப்பை தொடரில் பாண்ட்யா பங்கேற்பாரா?

ஆசிய கோப்பை தொடர் வரும் செப்.09-ம் தேதி UAE-ல் துவங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் வரும் ஆக.11,12-ம் தேதிகளில் பெங்களூருவில் உள்ள BCCI-ன் சிறப்பு மையத்தில் (COE) 2 நாட்கள் உடற்தகுதி மதிப்பீட்டை அவர் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மதிப்பீட்டின் முடிவே இத்தொடரில் அவர் பங்கேற்பாரா, இல்லையா என்பதை தீர்மானிக்கும்.