News October 23, 2024

கல்லூரிக்குள் போதையில் ரகளை செய்த 3 பேர் கைது.!

image

துவாக்குடி அரசு கலை கல்லூரியில் இன்று மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத 3 நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தியுள்ளனர்.அங்கு படிக்கக்கூடிய மாணவ,மாணவிகளிடம் தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.அவர்களை தட்டிக்கேட்க சென்ற துளசிராம்,வைரவளவன் என்ற மாணவர்களை தாக்கி உள்ளனர்.பிறகு,துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து அந்த மூவரையும் கைது செய்தனர்.

Similar News

News February 7, 2026

திருச்சி: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திருச்சி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)
3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 7, 2026

பஞ்சப்பூர்: காய்கறி சந்தைக்கு ரூ.100 கோடி நிதி

image

பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த காய்கறி சந்தை கட்டுமான பணிகளுக்கு, முனிசிபல் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு, மும்பை பங்குசந்தை வாயிலாக பத்திரங்கள் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் ரூ.100 கோடி மாநகராட்சிக்கு நிதி வரப் பெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!