News October 23, 2024
ஈரான் அதிபருடன் PM மோடி சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள PM மோடி, ரஷ்யாவின் காசானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர், ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்து பேசினார். அப்போது, மேற்காசிய விவகாரம் குறித்து 2 பேரும் பேசினர். அங்கு அதிகரித்து வரும் மோதலுக்கு கவலை தெரிவித்த மோடி, அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
Similar News
News January 16, 2026
தேமுதிக பிடிவாதத்தால் EPS அப்செட்

தேமுதிகவின் சமீபத்திய கடலூர் மாநாட்டில் கட்சி நிர்வாகிகளே எதிர்பாரத வகையில் பெரும் கூட்டத்தை பிரேமலதா கூட்டிவிட்டார். அதை காரணம் காட்டி, பாமகவை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படி கொடுத்தால், வடமாவட்டங்களில் பாமகவை கூட்டணியில் சேர்த்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என EPS கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 16, 2026
உழவுத் தோழர்களுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்

உழவுத் தோழர்களுக்கு பகிர வேண்டிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள் இதோ *உழவனின் தொண்டனாய், வீரத்தின் அடையாளமாய் விளங்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்துவோம்.. *உழவுக்கு உறுதுணை புரியும் மாடுகளுக்கும், இயற்கைக்கும் நன்றி உரைத்துப் பொங்கலிடும் நாள், மாட்டுப் பொங்கல் திருநாள்! *இது உழவர்களின் தோழனை கொண்டாடும் திருநாள், அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
News January 16, 2026
சமூக சேவைக்கு ₹81,324 கோடி கொடுத்த பில் கேட்ஸ்

உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனமான Bill & Melinda Gates Foundation-ஐ மூடும் பணிகளை பில்கேட்ஸ் தொடங்கியுள்ளார். அதன்படி நடப்பாண்டில் $9 பில்லியன் (₹81,324 கோடி) தொண்டு பணிகளுக்கு செலவிடும் அதேவேளையில், தனது அறக்கட்டளையில் வேலை செய்யும் 500 பேரை வேலை நீக்கம் செய்ய உள்ளார். 2045-க்குள் தனது சொத்தின் பெரும்பகுதியை ($200 பில்லியனை தாண்டும்) நன்கொடையாக வழங்கி அறக்கட்டளையை மூட உள்ளார்.


