News October 23, 2024

ஈரான் அதிபருடன் PM மோடி சந்திப்பு

image

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள PM மோடி, ரஷ்யாவின் காசானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர், ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்து பேசினார். அப்போது, மேற்காசிய விவகாரம் குறித்து 2 பேரும் பேசினர். அங்கு அதிகரித்து வரும் மோதலுக்கு கவலை தெரிவித்த மோடி, அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

Similar News

News July 7, 2025

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.

News July 7, 2025

நாம் இருவரும் சேரும் சமயம்…!

image

SJ சூர்யா இயக்கும் ‘கில்லர்’ பட இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகியுள்ளார். நேற்றைய தினம், படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும் என SJ சூர்யா கேட்ட கேள்வி நெட்டிசன்களிடம் படுவைரலானது. அதற்கு இன்று காலை பதிலளிப்பதாகவும் SJ சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘நாம் இருவரும் சேரும் சமயம்’ என ‘அன்பே ஆருயிரே’ படத்தில் வரும் பாட்டு வரியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 7, 2025

பொய் சொல்கிறதா TNPSC? அன்புமணி சரமாரி கேள்வி

image

2024, ஜூலையில் 17,502 பேருக்கு பணி வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பிறகு 8,618 பேரே தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், அறிவிப்புக்கு முன்பு எழுதப்பட்ட தேர்வு முடிவுகளைக் கொண்டு 17,702 பேரை தேர்வு செய்துவிட்டோம் என்று TNPSC அறிக்கை விடுவதா என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். TNPSC, திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!