News October 23, 2024

14 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழை

image

இன்று (அக்.23) காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

Similar News

News January 17, 2026

19 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற வீரர்

image

காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் 19 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்து, ₹8 லட்சம் மதிப்பிலான காரை தட்டிச் சென்றார். பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் 17 காளைகளை அடக்கி, 2-வது இடத்தை பிடித்து பைக் பரிசு பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஏவிஎம் பாபுவின் காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

SPONSOR-களைத் தேடுவது ஏன்? அஜித்தின் விளக்கம்

image

நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்குப் பின் விளம்பரம் ஒன்றில் நடித்தது பேசுபொருளானது. இதனிடையே SPONSOR-களை தேடுவது குறித்த அவரது பேட்டி வைரலாகியுள்ளது. அதில் சொத்து சேர்க்க SPONSORகளை தேடவில்லை என்றும், ரேஸ் டிரைவர்கள், கார் உற்பத்தி நிறுவனங்கள் எனப் பலரின் நன்மைகளை கருத்தில்கொண்டு SPONSOR-க்காக பல கதவுகளை தட்டி வருவதாக விளக்கமளித்துள்ளார்.

News January 17, 2026

திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

பொங்கல் பண்டிகையை ஒட்டி, பள்ளிகளுக்கு ஜன.14 – 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் படுகுஷியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்ப ஏதுவாக திங்கள்கிழமை அன்றும் விடுமுறை அளிக்க பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை ஏற்படும் கூட்ட நெரிசலில் சிரமத்தை சந்திக்காமல் இருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!