News October 23, 2024

14 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழை

image

இன்று (அக்.23) காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

Similar News

News July 7, 2025

மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்

image

‘UP Tiger’ என அழைக்கப்பட்ட மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங்(87) காலமானார். மன்காபூர் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் கோண்டா தொகுதியிலிருந்து 4 முறை MP-யாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக உள்ள கீர்த்தி வர்தமானின் தந்தையாவார். உத்தரபிரதேச அரசியலில் மிக முக்கியமான முகமாக அறியப்பட்ட குன்வர் மறைவுக்கு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News July 7, 2025

KN நேரு சகோதரருக்கு எதிரான CBI வழக்கு ரத்து

image

2013-ல் IOB-ல் பெற்ற கடனில் செய்த மோசடியால் ₹22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாக KN நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்திற்கு எதிராக புகார் எழுந்தது. இதன்பேரில் CBI பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் ED சோதனை மேற்கொண்டது. இதனிடையே, இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ₹15 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிட்டு CBI பதிவு செய்த வழக்கை HC ரத்து செய்துள்ளது.

News July 7, 2025

அஜித் மரணம்: பணிக்கு திரும்பிய புகார்தாரர் நிகிதா!

image

அஜித் குமார் லாக்கப் டெத் வழக்கில் புகார் கொடுத்த நிகிதா கூலாக பணிக்கு திரும்பியுள்ளார். அவர் மீது பல்வேறு பண மோசடி புகார்கள் நிலுவையில் இருப்பதாக அவரது முன்னாள் கணவர் திருமாறன் உள்ளிட்டோர் கூறியிருந்தனர். மேலும், அவரை கைது செய்து போலீசார் விசாரிக்க உள்ளதாகவும் பேசப்பட்டது. ஆனால், 20 நாள்கள் மருத்துவ விடுப்பு முடிந்து இன்று திண்டுக்கல்லில் உள்ள MV முத்தையா அரசு கல்லூரிக்கு பணிக்கு சென்றுள்ளார்.

error: Content is protected !!