News October 22, 2024
ஒரே நாளில் ₹10 லட்சம் கோடி Loss

இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் பங்குகளை சரமாரியாக விற்பனை செய்ததால், அவற்றின் விலைகள் கடுமையாக சரிந்தன. இதன் காரணமாக பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் சுமார் ₹10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ₹93,500 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
Similar News
News August 12, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

* நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.
*பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெறுத்தேன், ஆனால் ‘விட்டுவிடாதே. இப்போது கஷ்டப்பட்டு, வாழ்நாள் முழுவதும் ஒரு சாம்பியனாக வாழ்’ என கூறிக்கொண்டேன் .
* நான் எங்கே போகிறேன் என தெரியும், நான் எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படி நான் இருக்க வேண்டியதில்லை. நான் எப்படி இருக்க வேண்டும் என்று சுதந்திரமாக இருக்கிறேன்.
News August 12, 2025
IPL அணி வாங்கும் எண்ணம்? சல்மான் கான் பதில்

ISPL என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் சல்மான் கான் பங்கேற்ற போது, IPL அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 2008-ம் ஆண்டு IPL அணி வாங்குவதற்கு அழைப்பு வந்தது என்றும், ஆனால் அதனை அந்த சமயத்தில் ஏற்கவில்லை என்றார். அதை நினைத்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும் பதிலளித்துள்ளார்.
News August 12, 2025
மகாராஷ்டிராவில் கோர விபத்து: 8 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம் ஹெத் மலைப்பகுதியில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் என்ற சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை தரிசனம் செய்வதற்காக 40 பக்தர்களுடன் வந்த மினி சரக்கு லாரி ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பெண்கள் உயிரிழந்த நிலையில், 29 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ₹4 லட்சம் நிவாரணம் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.