News March 18, 2024
ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜுன் 14இல் அவர் கைது செய்யப்பட்டார். பல முறை அவர் ஜாமின் கோரி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல்
செய்திருந்த நிலையில், அவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைய உள்ள நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.
Similar News
News April 27, 2025
54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற பாக்., ராணுவம்!

ஆப்கானிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற 54 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் (Waziristan) தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
News April 27, 2025
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நீட்டிக்க வாய்ப்பு!

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் ED வழக்கில் சுப்ரீம் கோர்ட்(SC) நாளை ஜாமினை நீட்டிக்க வாய்ப்புள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை ED கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, 2024 செப்.26-ம் தேதி அவருக்கு SC ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பதவியா? ஜாமினா? என முடிவெடுக்க SC கெடு விதித்திருந்தது.
News April 27, 2025
J&K-வில் புதிய அரசியல் கட்சி உதயம்

பஹல்காம் தாக்குதலை அடுத்து J&K-ல் பதற்றம் நிலவிவரும் நிலையில், தடைசெய்யப்பட்ட இயக்கமான ஜமாத்-இ-இஸ்லாமி(JeI) புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. த ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஃப்ரண்ட் (JDF) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அக்கட்சிக்கு முன்னாள் JeI நிர்வாகி ஷமீம் அகமது தோக்கர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். J&K உள்ளாட்சி தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.