News March 18, 2024
ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மீண்டும் மனுத் தாக்கல்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜுன் 14இல் அவர் கைது செய்யப்பட்டார். பல முறை அவர் ஜாமின் கோரி நீதிமன்றங்களில் மனுத் தாக்கல்
செய்திருந்த நிலையில், அவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மக்களவை தேர்தல் பரப்புரை தீவிரமடைய உள்ள நிலையில், தற்போது 2ஆவது முறையாக அவர் உச்சநீதிமன்றம் சென்றுள்ளார்.
Similar News
News November 18, 2025
திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.
News November 18, 2025
திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.
News November 18, 2025
அமைச்சரை ஓரங்கட்டுகிறதா திமுக தலைமை?

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதய்யின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வயதான & சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரங்கட்ட திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில், வரும் தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதை தெரிந்துதான், பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஆக்டிவாக இல்லை என்கின்றனர்.


