News October 22, 2024
ரயிலில் பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே புதிய வேண்டுகோளை விடுத்துள்ளது. அதன்படி, பயணிகள் தங்களின் பாதுகாப்பான பயணத்திற்கு, பட்டாசுகளையோ, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையோ எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். எதிர்பாராத விபத்துக்களை ஏற்படுத்த கூடும் என்பதால் பயணிகள் கண்டிப்பாக பட்டாசு பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று (செப்.13) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அடையாறு, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (ஷேர் பண்ணுங்க)
News September 13, 2025
அரும்பாக்கம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை

ஓட்டேரியை சேர்ந்த 31 வயது பெண், ரேபிடோ பைக் ஓட்டி வருகிறார். இவர் கோயம்பேடு முதல் அரும்பாக்கம் வரை வாடிக்கையாளரை அழைத்துச் செல்லும்போது, ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அரும்பாக்கத்தில் வாகனத்தை நிறுத்தி கேள்வி எழுப்பியபோது, பொதுமக்கள் வருவதை பார்த்து அவன் தப்பியதால், பெண் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்பரை கைது செய்தனர்.
News September 13, 2025
சென்னை: கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

சென்னை மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே<