News October 22, 2024
SEBI தலைவருக்கு ரூட் கிளியர்..?

SEBI தலைவர் மாதபி புரி மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பதவிக்காலம் முடியும் வரை (2025 பிப்ரவரி) அவர் பொறுப்பில் தொடருவார் என்றும் கூறப்படுகிறது. அதானி நிறுவனங்களில் பங்கு, ICICI வங்கியிடம் ஊதியம் பெற்றது, ZEE குழும தலைவரிடம் லஞ்சம் கேட்டது என அவர் மீது அடுக்கடுக்காக புகார் அளிக்கப்பட்டது.
Similar News
News August 12, 2025
தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம்: SP வேலுமணி

மாநகராட்சியில் குடியேறும் போராட்டம் என்ற பெயரில் தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு தீர்வு காணவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்த அரசு முன்வர வேண்டுமென EX அமைச்சர் SP வேலுமணி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தூய்மை பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளித்தார்.
News August 12, 2025
SK-வுடன் ஜோடி சேரும் மிருணாள் தாக்கூர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் விரைவில் ஒரு படம் நடிக்கவுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது முடிவடைந்துவிட்டதாகவும், இதில் சிவகார்த்திக்கேயன் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இப்படத்தில் மிருணாள் தாக்கூரை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
News August 12, 2025
வரும் IPL ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள்?

IPL மினி ஏலம் 2026 ஜனவரி மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் எந்த வீரர் அதிக விலைக்கு போவார்கள் என சில கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி சஞ்சு சாம்சன், இஷான் கிசான், வெங்கடேஷ் ஐயர், கேம்ரூன் க்ரீன் ஆகியோர் இந்தமுறை ஏலத்துக்கு வரவாய்ப்புள்ளதாகவும், இவர்கள் சுமார் 20 கோடிக்கு மேல் ஏலத்துக்கு போவார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.