News March 18, 2024

நாளை முதல் காங்கிரஸ் விருப்ப மனு

image

காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நாளை (19.03.24) முதல் நாளை மறுநாள் (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.

Similar News

News December 18, 2025

கடும் நெருக்கடியில் தமிழக ஏற்றுமதி துறை: CM கடிதம்

image

USA வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் ஏற்றுமதி துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக PM மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளதால், இதற்கு விரைவில் தீர்வு காண அவர் கோரியுள்ளார்.

News December 18, 2025

நத்தைகளால் மூளைக்காய்ச்சல்: டாக்டர்கள் எச்சரிக்கை

image

மழை, குளிர் காலங்களில் நத்தைகள் மூலமாக மூளைக்காய்ச்சல் பரவக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட நத்தைகளை தொட்டால் நமக்கும் அந்த பாதிப்பு பரவிவிடுகிறது. காய்ச்சல், கழுத்துவலி, மயக்கம், குமட்டல், மூர்ச்சை நிலையை தொடர்ந்து மூளைக்காய்ச்சல் உருவாகலாம் என கூறும் டாக்டர்கள், எனவே நத்தைகளை கை, கால்களால் தொட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

News December 18, 2025

மங்களகரமான மார்கழி ஸ்பெஷல் கோலங்கள்!

image

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும், பெண்கள் அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிட்டு அதன் மீது சாணத்தில் பிள்ளையார் பிடித்து பரங்கிப்பூ வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம். அப்படியாக, வீட்டு வாசலை அலங்கரிக்கும் சில கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்த்து, வீட்டில் முயற்சிக்கவும்.

error: Content is protected !!