News October 22, 2024
தஸ்லிமா நஸ்ரின் தொடர்ந்து தங்கியிருக்க இந்தியா அனுமதி

சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. மத அடிப்படைவாதம், பெண்கள் உரிமை தொடர்பாக எழுதியதால் பல இஸ்லாமிய அமைப்புகள், பத்வா பிறப்பித்தன. இதையடுத்து வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் குடியேறிய அவர், 2022 ஜூலைக்கு பிறகு தனக்கு அனுமதி தரப்படவில்லை எனக் கூறி, அமித் ஷாவுக்கு நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
Similar News
News July 7, 2025
மகளிர் உரிமைத்தொகை: வீடு வீடாக விண்ணப்பம்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல் முகாமை வரும் 15-ம் தேதி சிதம்பரத்தில் CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனிடையே, இன்று முதல் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கவுள்ளது. இப்பணி 3 மாதங்கள் நடைபெறும் எனவும் சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
News July 7, 2025
மீண்டும் சிக்குகிறார் செந்தில் பாலாஜி

2021-23-ல் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ₹397 கோடி முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்வது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்வதாக தமிழக அரசு கோர்ட்டில் தெரிவித்தது. அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டால், மீண்டும் ED உள்ளே வரலாம் எனவும் அது கைது வரை கூட நீள வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
News July 7, 2025
அம்மன் சென்டிமென்ட்.. ஆட்டத்தை தொடங்கும் இபிஎஸ்!

2026 தேர்தல் பரப்புரையை இபிஎஸ் இன்று தொடங்குகிறார். கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பிரசித்திபெற்ற வனபத்திரகாளியம்மன் ஆலயத்தில் இருந்து ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளார். பின்னர் மாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே ரோடு ஷோ நடத்தும் இபிஎஸ் இன்று மட்டும் 62 கி.மீ பயணம் செய்ய உள்ளார்.