News October 22, 2024
ஆண்டுக்கு ₹100-500 கோடி வரை சம்பாதிக்கும் ஊழியர்கள்

கடந்த 10 ஆண்டுகளில் 23 தொழிலதிபர்கள் ₹500 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளதாக தெரிவித்திருப்பதாக TOI தெரிவித்துள்ளது. ₹100-500 கோடியில் 262 பேர் உள்ளனர், அவர்களில் 19 பேர் பணியாளர்கள். மேலும் AY2013-14இல், ஒருவர் மட்டுமே வருமானம் ₹500Cr+ என்று கூறி ITR தாக்கல் செய்துள்ளார். AY2022-23 உடன் ஒப்பிடுகையில், ₹25 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் எண்ணிக்கை 1812ல் இருந்து 1798 ஆக குறைந்துள்ளது
Similar News
News July 7, 2025
தூத்துக்குடி மாவட்டம், சோளிங்கர் வட்டத்திற்கு லீவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று (ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனால், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி வேலைநாளாகும். அதேபோல், யோக ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராணிப்பேட்டையின் சோளிங்கர் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறையாகும். SHARE IT.
News July 7, 2025
டாக்டராக ஆக வேண்டுமென்பது கனவு: மமிதா பைஜூ

‘ஜனநாயகன்’, ‘டியூட்’ படங்களில் நடித்து வரும் மமிதா பைஜூ டாக்டர் கனவு தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடி உள்ளது என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன் டாக்டராக வேண்டுமென தான் கனவு கண்டதாகவும், ஆனால் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த தனது தந்தை எதிர்பாராவிதமாக டாக்டராகி விட்டதாகவும் கூறினார்.
News July 7, 2025
பெரியவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்

உடல் ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி மிகவும் அவசியம், மேலும் இது பல நோய்களைத் தடுக்க உதவும். பெரியவர்கள் பொதுவாக ஒரு நாளைக்கு 10,000 அடிகள் (தோராயமாக 3 கிலோமீட்டர்) நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப இதை 4,000 முதல் 10,000 அடிகள் வரை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நடைபயிற்சி தூரம் வேறுபடலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.