News October 22, 2024
குமரியில் சிறுமியை வன்புணர்வு செய்த 2 பேர் கைது

கன்னியாகுமரி அருகே சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்த காதலன் மற்றும் சிறுமியிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இரண்டு பேரை குமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காதலன் ஆல்வின், தகாத முறையில் நடக்க முயன்ற ரகுநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
Similar News
News April 29, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
News April 29, 2025
குமரிக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை குடும்ப நல கோர்ட் கூடுதல் நீதிபதி தனசேகரன் நாகர்கோவில் விரைவு மகளிர் கோர்ட் நீதிபதியாகவும் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு 17வது கூடுதல் நீதிபதி தோத்திர மேரி குழித்துறை கூடுதல் நீதிபதியாகவும் குழித்துறை மாவட்ட கூடுதல் நீதிபதி முருகன் தூத்துக்குடி மகளிர் விரைவு கோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News April 29, 2025
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தொடர்பு எண்கள்

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
காவல் துறை துணை கண்காணிப்பாளர்:
4651250741 -தக்கலை
4652220197 -நாகர்கோவில்
4652246947 -கன்னியாகுமரி
உதவி காவல் துறை கண்காணிப்பாளர் – 4651226227 – குளச்சல்
அனைத்து மகளிர் காவல் நிலையம்:
4652275949 -நாகர்கோயில்
4651271128 -குழித்துறை
4651228500- குளச்சல்
*ஷேர் பண்ணுங்க