News October 22, 2024

10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது!

image

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளையும் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.

Similar News

News July 7, 2025

திருமாறன் கூறுவது அப்பட்டமான பொய்: நிகிதா

image

உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது புகார் தெரிவித்த நிகிதா, தன்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிவிட்டார் என்றும், 3க்கும் மேற்பட்ட திருமணங்களை அவர் செய்திருப்பதாகவும் திருமாறன் என்பவர் புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நிகிதா, திருமாறன் உடனான உறவு எப்போதோ முடிந்துவிட்டது என்றும், ₹10 லட்சம் வாங்கிக்கொண்டு நான் விவாகரத்து கொடுத்தேன் என அவர் கூறுவது அப்பட்டமான பொய் என்றார்.

News July 7, 2025

எம்.எஸ்.தோனி பொன்மொழிகள்

image

*”தோல்வியைக் கண்டு பயப்பட வேண்டாம், அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுங்கள்”, *”கடின உழைப்பைச் செலுத்தி முடிவுகளைப் பெறுவது முக்கியம்”. *”எல்லாமே உங்கள் வழியில் செல்லும் நல்ல நேரங்களுடன் ஒப்பிடும்போது நீங்கள் கடினமான காலகட்டத்தை கடக்கும்போது நிறைய கற்றுக்கொள்கிறீர்கள்”*”வெற்றி என்பது இலக்கு அல்ல, அது ஒரு பயணம்.” * “நீங்கள் கூட்டத்திற்காக விளையாடுவதில்லை, நாட்டிற்காக விளையாடுகிறீர்கள்.”

News July 7, 2025

’மகள்களின் சிகிச்சைக்காக அரசு பங்களாவில் உள்ளேன்’

image

SC முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் பதவி வகித்தப் போது வசித்த அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளார் என புகார் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்த அவர், தனது மகள்களுக்கு நெமலின் மயோபதி எனும் தசை நோய் உள்ளதாகவும், அதற்காக எய்ம்ஸில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தான் ஏற்கனவே SC நீதிபதிகள், அலுவலர்களிடம் விளக்கமளித்திருப்பதாகவும் கூறினார்.

error: Content is protected !!