News October 22, 2024

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 492 மனுக்கள் பெறப்பட்டன

image

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்பு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 492 மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Similar News

News August 18, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிங்கள்.

News August 18, 2025

விழுப்புரத்துல இது தாங்க செம்ம Famous

image

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு பிரபலமாக இருக்கும். அந்த வகையில் விழுப்புரம் என்றாலே அது முட்டை மிட்டாய் தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. பால், முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் முட்டை மிட்டாய் கேக்-ஐ விட மென்மையாகவும் வாயில் வைத்தவுடன் கரையும் தன்மையுடனும் இருக்கும். விழுப்புரத்தில் இருந்து கொண்டு, இது வரை முட்டை முட்டையை சாப்பிடாத உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News August 18, 2025

விழுப்புரம்: அரசுப் பேருந்து மோதி ஐடி ஊழியர் பலி

image

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (22), விடுமுறைக்காக பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன

error: Content is protected !!