News March 18, 2024
அரக்கோணம் தொகுதி யாருக்கு?

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 26, 2025
ராணிப்பேட்டை: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <
News October 26, 2025
அரக்கோணம்: வீடே அதிரக் கேட்ட சத்தம்..!!

ராணிப்பேட்டை: கீழாந்தூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் நேற்று (அக்.25) கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரம் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் வெடி விபத்து குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
News October 26, 2025
ராணிப்பேட்டையில் கோரவிபத்து, இருவர் பலி

ராணிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வாலாஜா அணைக்கட்டில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த மணிகண்டன்(22), அருண்(21) விடுமுறையை ஒட்டி குளிக்க பூண்டி கிராமம் அருகே சென்றதாக கூறப்படுகிறது. பின் குளிக்க இருவரும் நீரில் இறங்கும் பொது, நீரின் வேகம் அதிகமான நிலையில் இருவரும் அடுத்து செல்லப்பட்டனர். மேலும் போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.


