News March 18, 2024
பெரம்பலூரில் களமிறங்கும் திமுக!

2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இவர் பாஜகவில் இணைந்துள்ளதால், திமுக சார்பில் இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Similar News
News October 26, 2025
பெரம்பலூர்: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..
News October 26, 2025
பெரம்பலூர் மாவட்ட மக்களே கவனம்!

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பருவமழைக் காலங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் காற்று காரணமாக மின்கம்பிகள் அருந்து கிடந்தால், அதனைத் தொடாமல் செல்ல வேண்டும், மின்கம்பங்கள் சாய்ந்து இருந்தாலும், பழுதடைந்து இருந்தாலும் பொதுமக்கள் சேவை மையமான மின்னகத்தை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவுறுத்தியுள்ளார்.
News October 26, 2025
பெரம்பலூர்: டிரான்ஸ்பார்ம் உதிரி பாகம் திருட்டு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு கரண்ட் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகாரின் பேரில், மின்வாரிய ஊழியர்கள், மின்மாற்றியில் பழுது உள்ளதா? என பார்க்க சென்றனர். அப்போது, அந்த டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதி கழட்டப்பட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 18 காப்பர் காயில் சிலிண்டர்கள் திருடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


