News October 22, 2024
13 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழை

இன்று (அக்.22) காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதன்படி, தி.மலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் காலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, ராணிப்பேட்டை, நாகை, திருவாரூர், திண்டுக்கல்லில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT.
Similar News
News July 6, 2025
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

பாஜகவுடனான கூட்டணி தற்காலிகமானதுதான் என அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா கூறியதற்கு <<16965259>>அண்ணாமலை கருத்து கூற மறுத்தது<<>> பேசுபொருளாகியுள்ளது. அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. அண்ணாமலையின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?
News July 6, 2025
நடிகை கைலி பேஜ் மரணம்.. போதை மருந்து காரணமா?

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த இளம் நடிகை கைலி பேஜ்(28) கடந்த 3-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் சடலமாக கிடந்தார். 2016 முதல் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்ட இவருக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர். இந்நிலையில், TMZ சினிமா வலைத்தள தகவலின்படி அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்ததே உயிர்போக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. Say no to drugs
News July 6, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?