News October 21, 2024

SHOCKING: 5 வயது சிறுமியை ரேப் செய்த 3 சிறுவர்கள்

image

உ.பி., பல்லியா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை 3 சிறுவர்கள் சேர்ந்து ரேப் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மேலும் கொடுமையானது இச்சிறுவர்களின் வயது 6, 13, மற்றும் 16 என்பதாகும். மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, வன்கொடுமை செய்த, 3 சிறுவர்கள் மீதும் போக்சோ வழக்கு பதியப்பட்டு, போலீஸ் விசாரித்து வருகின்றனர். குழந்தைகள் கொடூரர்களாக மாற யார் காரணம்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

Similar News

News August 22, 2025

தோனி கேப்டன்சி.. ஒரே வரியில் சொன்ன டிராவிட்

image

தோனி கேப்டன்சியில், அவர் வீரர்களைக் கையாண்ட விதத்தை இப்போதும் நினைத்து பிரமிப்படைவதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில், ஒரு இளைஞராக இருந்து கேப்டன் பொறுப்பில் தன்னை தக்கவைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்றும் தோனிக்கு அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல், வீரர்களுடன் உணர்வுப்பூர்வமாக இணையும் திறனே ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு மிகப்பெரிய பலம் என்றும் கூறியுள்ளார்.

News August 22, 2025

உக்ரைன் போரை இந்தியா நிரந்தரமாக்குகிறது: USA

image

50% வரி விதித்தபோதிலும் ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வர்த்தக உறவை இந்தியா தொடர்கிறது. இதனால், இந்தியா உக்ரைன் மீதான போரை நிரந்தரமாக்குவதாக வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவார்ரோ காட்டமாக தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய்யை வாங்கி, உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரை தொடுப்பதற்கான நிதியை இந்தியா வழங்குவதாகவும் அவர் சாடியுள்ளார். இந்தியா, ஒரு லாப நோக்கத்துடனான சலவை இயந்திரமாக செயல்படுகிறது என்றார்.

News August 22, 2025

BREAKING: தெருநாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு

image

டெல்லியில் தெருநாய்களை தனியாக காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், தெருநாய்களை பிடித்து தனியாக காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், நாய்களை பிடித்து கருத்தடை ஊசி செலுத்திய பிறகு மீண்டும் நாய்களை வெளியில் விட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!