News October 21, 2024

இன்றே கடைசி: 10th முடித்தவர்களுக்கு வேலை

image

NABARD வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 108 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.21) கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த 18 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக மாதம் ₹35,000 வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு <>www.nabard.org<<>> என்ற இணையதளத்தை அணுகவும்.

Similar News

News August 22, 2025

ஆகஸ்ட் 22: வரலாற்றில் இன்று

image

*1639 – நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) பிரிட்டிஷ் அமைத்தது.
*1894 – SA-வில் இந்திய வணிகர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடால் இந்தியக் காங்கிரஸ் என்ற அமைப்பை மகாத்மா காந்தி துவக்கினார்.
*1955 – நடிகர் சிரஞ்சீவியின் பிறந்ததினம்.
*1958 – நடிகர் லிவிங்ஸ்டன் பிறந்ததினம்.
*1932 – தொலைக்காட்சி சேவை துவங்க BBC சோதித்தது.

News August 22, 2025

இணையத்தில் வைரலாகும் ஜான்வி கபூர் போட்டோஸ்

image

80-களில் தமிழில் ஜாம்பவான் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர் தற்போது ஹிந்தியிலும், தெலுங்கிலும் கவனிக்கதக்க நடிகையாக வளர்ந்து வருகிறார். விரைவில் அவர் தமிழ் சினிமாவிலும் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் அண்மையில் எடுத்த போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பார்க்கவும்.

News August 22, 2025

டெல்லியில் தெருநாய்கள் நிலை? SC-ல் இன்று முடிவு

image

டெல்லியில் தெருநாய்களை காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என SC அண்மையில் உத்தரவிட்டது. இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இந்த விவகாரம் 3 நீதிபகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஆக.,14-ம் தேதி 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், உத்தரவு பிறப்பிக்காமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

error: Content is protected !!