News October 21, 2024
தமிழ், தமிழன், திராவிடத்தை தொடக்கூட முடியாது: உதயநிதி

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழ், தமிழன், திராவிடத்தை தொடக்கூட முடியாது என உதயநிதி கூறியுள்ளார். இந்தியை திணிக்க முடியாததால், தமிழ்த்தாய் வாழ்த்தில் சில சொற்களை தவிர்த்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இந்தி திணிப்பை தமிழகம் ஒருநாளும் ஏற்காது என்றார். முன்னதாக, ஆளுநர் பங்கேற்ற DD தமிழ் நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது.
Similar News
News September 8, 2025
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!

பெரும்பாலான வீடுகளில் மதியம் சமைத்த உணவு மீதமிருந்தால், அதனை சூடுபடுத்தி டின்னருக்கு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சில உணவுகள் கெடவில்லை என்றாலும் அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். SHARE.
News September 8, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

அதிமுகவில் உள்கட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இடங்களில் அதிருப்தியில் உள்ளோரை திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் செந்தில்பாலாஜி கச்சிதமாக காய்நகர்த்தி வருகிறார். அந்த வகையில், கரூரில் ADMK, BJP, DMDK-வில் இருந்து விலகிய பலர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவர் ஒருவரை இணைக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளாராம்.
News September 8, 2025
FLASH: 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பரவலாக இன்று(செப்.8) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. நேற்று, ராணிப்பேட்டை, ஆற்காடு, தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஆலங்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியே செல்வோர் குடையை மறக்காம எடுத்துட்டு போங்க.