News October 21, 2024
அதிக கட்டணம் வசூலித்தால்… இந்த எண்ணை அழையுங்கள்!

தீபாவளி நேரத்தில் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 1800 425 6151, 9445014436, 044-2474 9002 / 2628 0445/ 2628 1611 தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். பயணிகளின் வசதிகளுக்காக கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
பான் கார்டு எண் பற்றிய இந்த சீக்ரெட் தெரியுமா?

✦முதல் 3 எழுத்துக்கள்: A – Z என Random-ஆக தரப்படுவது ✦4-வது எழுத்து: இது ஒரு நபர் (அ) நிறுவனத்தின் வகையைக் குறிக்கும். (Ex.) P என்பது தனிநபர், C என்பது நிறுவனம், T என்பது அறக்கட்டளை ✦5-வது எழுத்து: கார்ட் வாங்குபவர் பெயரின் முதல் எழுத்து ✦6-வது முதல் 9-வது வரையான எண்கள்: 0001 – 9999 வரை Random-ஆக அளிக்கப்படுவது ✦10-வது எழுத்து: Check Digit எனப்படும் இதை பார்முலா மூலம் கணக்கிடுகின்றனர்.
News July 6, 2025
வாரத்துக்கு ₹1.60 கோடி.. Liverpool அறிவிப்பு!

சமீபத்தில், ஸ்பெயினில் நிகழ்ந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா உயிரிழந்தார். இந்நிலையில், அவரது விளையாட்டு ஒப்பந்தத்தில் மீதமுள்ள தொகையை டியோகோவின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக Liverpool கிளப் அறிவித்துள்ளது. இதன்மூலம் 2027, ஜூன் வரை வாரத்திற்கு ₹1.60 கோடி அவரின் குடும்பத்திற்கு கிடைக்கும். இவர், தனது 13 வருட காதலியை விபத்துக்கு 2 வாரங்களுக்கு முன்புதான் மணமுடித்தார்.
News July 6, 2025
தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி

மூத்த <<16955086>>தமிழறிஞர் வா.மு.சேதுராமன்<<>> உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை, CM ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைகோ, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு சேதுராமன் குடும்பத்தினர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.