News October 21, 2024

நாதக நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்

image

நாதக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன், வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அனைவரும் கட்சியில் உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும், சீமானின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Similar News

News July 6, 2025

ICUவில் அஜித் குமார் தம்பி… அடுத்தடுத்து திருப்பம்

image

போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸ் தாக்கியதில் தனது கால் பாதங்களில் வலி ஏற்பட்டிருப்பதாக நவீன் கூறியதால் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருப்பதாக அவரது தாய் மாமா விளக்கம் அளித்துள்ளார். அண்ணனை போலீஸ் விசாரிக்கும்போது தன்னையும் தாக்கியதாக நவீன் ஏற்கனவே கூறி இருந்தார்.

News July 6, 2025

ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய…

image

ரகசிய கேமராக்கள் இருக்கிறதா என்பதை அறிய ●அறையிலுள்ள விளக்குகளை அணைத்து, சின்னதாக LED லைட்டின் வெளிச்சம் எங்காவது தெரிகிறதா என கவனியுங்க ●உங்கள் விரலுக்கும் கண்ணாடியில் தெரியும் விரலின் பிரதிபலிப்புக்கும் இடையில் எந்த இடைவெளியும் இல்லை என்றால், அந்த கண்ணாடியை நன்றாக செக் பண்ணுங்க ●கேமரா கண்டுபிடிப்பு செயலிகளைப் பயன்படுத்தி, போனின் கேமரா & சென்சார் மூலம் கண்டுபிடிக்கலாம். SHARE IT.

News July 6, 2025

தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.

error: Content is protected !!