News March 18, 2024
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.
Similar News
News February 17, 2026
ராணிப்பேட்டை: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

ராணிப்பேட்டை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 17, 2026
ராணிப்பேட்டையில் வெடிகுண்டா?

ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு இ-மெயில் மூலம் நேற்று (பிப்.16) மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அனால் இது பொய் செய்தி என தெரிய வந்தது. ஏற்கனவே கடந்த ஜனவரி 6-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்ததால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
News February 17, 2026
ராணிப்பேட்டையில் வாலிபர் துடிதுடித்து பலி!

திருமலைச்சேரியை சேர்ந்த தனியார் கம்பனி ஊழியர் பிரவீன்குமார் (21). இவர் நேற்று (பிப்.16) அதிகாலை வீட்டுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை-பெங்களூரு NH -ல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பைக் முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


