News March 18, 2024
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி கூட்டம் இன்று(மார்ச் 18) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை வகித்து பேசினார். அப்போது, வேட்புமனு நாளில் வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வர வேண்டும். 3 வாகனங்கள் மட்டுமே இருக்க வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். சனிக்கிழமை அன்றும் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.
Similar News
News August 26, 2025
ராணிப்பேட்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.26) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.
News August 26, 2025
இராணிப்பேட்டை: 21 நன்மை கிடைக்க இப்படி பண்ணுங்க.!

இராணிப்பேட்டை மக்களே.. விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவதால் நமக்கு 21 நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, மோட்ஷம், முக லட்சணம், வெற்றி, அன்பு,நட்பு,சாந்தம்,பில்லி சூனியம் நீங்குதல் உள்ளிட்ட 21 நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வழிபட்டால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.Share.
News August 26, 2025
இராணிப்பேட்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

இராணிப்பேட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம்.உங்கள் மாவட்டம்,ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <