News October 21, 2024
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமையன்று அணையில் விநாடிக்கு 1,079 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று(அக்20) காலை விநாடிக்கு 1,206 கன அடியாக அதிகரித்தது.எனவே, அணையிலிருந்து தென்பெண்ணை ஆறு மற்றும் கால்வாயில் 1,206 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில் தற்போது அணை நீர்மட்டம் 41.98 அடியாக உள்ளது.
Similar News
News August 26, 2025
இன்று கிருஷ்ணகிரி வரும் பிரேமலதா விஜயகாந்த்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிருஷ்ணகிரிக்கு இன்று (26/08/2025) வருகை தர உள்ளார். சேலம் பைபாஸ் அருகே ஆவின் மேம்பாலம் அருகே மாலை 6:00 மணிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். கட்சிப் பணிகள் பல்வேறு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தருகிறார்.
News August 25, 2025
இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள்

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். *வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க*
News August 25, 2025
கிருஷ்ணகிரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04343-225069, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள் <<17515752>>தொடர்ச்சி<<>>