News October 21, 2024
ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த யுவராஜ்(27) என்பவருக்கு 6 மாத பெண்குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்த இவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லாத காரணத்தினால், குடும்ப செலவுக்கு ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Similar News
News August 14, 2025
தாம்பரம் போலீசார் இரவு ரோந்து பணி விவரம்

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (14/08/25) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 14, 2025
செங்கல்பட்டு: ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.
News August 14, 2025
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு உட்பட சென்னை, காஞ்சிபுரம், வேலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 7 மாவட்டங்களில் 1-15 வயது குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கியூலக்ஸ் கொசு கடியால் பரவும் இந்த நோயால் தீவிர பாதிப்பு, மரணம் ஏற்படுத்தலாம். தடுப்பூசி பாதுகாப்பானது; வலது மேல்கையில் செலுத்தப்படும். பாதிப்பு ஏற்பட்டால் 104 அழைக்கலாம்.