News October 20, 2024
நமச்சிவாயபுரத்தில் இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு

நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது நிலத்தில் இன்று தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது திடீரென இடி தாக்கியதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
கள்ளக்குறிச்சி: திருட்டு வழக்கில் இருவர் கைது

செங்கமேடு, பாறை தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம், செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 6ஆம் தேதி ஆடு மேய்ச்சல் முடிந்து ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது 4 ஆடுகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரில் அதே கிராமத்தை சேர்ந்த அர்ஜூன், காமராஜ் ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News September 10, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் காய்கறிகளில் விலை நிலவரம்

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய செப்-10 காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ மதிப்பீட்டில் தக்காளி 25 ரூபாய் கத்தரிக்காய் ரூபாய் 40 அவரைக்காய் ரூபாய் 50 வெண்டைக்காய் ரொம்ப 25 புடலங்காய் ரூபாய் 30 கொத்தவரங்காய் ரூபாய் 40முருங்கைக்காய் ரூபாய் 60 முள்ளங்கி ரூபாய் 30 பரங்கி ரூபாய் 25 பூசணி ரூபாய் 20 சுரைக்காய் ரூபாய் 15 பச்சை மிளகாய் ரூபாய் 50 என விற்பனையாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரடி நியமன உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வழங்கினார்.