News October 20, 2024
உளவுத்துறை கண்காணிப்பதாக உதயகுமார் புகார்

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“ அழிக்கால் – பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராமத்தில் அண்மையில் கடல்நீர் உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது; நான் அங்கு நண்பர்களுடன் சென்று தலைவர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினேன்; அப்பாது, என்னை உளவுத்துறை போலீசார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து கண்காணித்தனர்” என குற்றச்சாட்டியுள்ளார்
Similar News
News August 16, 2025
குமரி மக்களே இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ, WHATSAPP எண்ணிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் மூலமாக தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். புகார் எண்கள்: 7708239100,8122223319…. SHARE பண்ணுங்க..!
News August 15, 2025
குமரியில் விநாயகர் சிலைகளை 10 இடங்களில் கரைக்கலாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் கன்னியாகுமரி, சொத்த விளை, சின்ன விளை, சங்குத்துறை, வெட்டுமடை, தேங்காய்ப்பட்டணம், மிடாலம் கடற்கரைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளிக்கோணம், அணைக்கட்டு, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு போன்ற இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அரசு அனுமதித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 15, 2025
குமரி இளைஞர்களே, அரசு இலவச பயிற்சி.. வேலை ரெடி!

குமரி இளைஞர்களே, தமிழக அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் 8-வது முதல் டிகிரி வரை எந்த படிப்பு முடித்திருந்தாலும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை உறுதி செய்து வருகிறது. TN Skill என்ற இணையதளத்திற்கு சென்று ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் முதல் ஐடி துறை வரை பல்வேறு பயிற்சிகளை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பை உறுதி செய்யும் இத்தகவலை SHARE பண்ணுங்க.