News October 20, 2024
நெல்லை முக்கிய ரயில் சேவையில் மாற்றம்

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 24ம் தேதி இரவு 11.25க்கு புறப்படவுள்ள 16729 மதுரை – புனலூர் விரைவு ரயில், மதுரை – திருநெல்வேலி இடையே மட்டுமே இயங்கும். இந்த ரயில் திருநெல்வேலி – புனலூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. புனலூர் ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 24ம் தேதி மாலை 5.15க்கு புறப்பட வேண்டிய 16730 ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 24, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News August 24, 2025
நெல்லை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பேசியதாவது: சதுர்த்தி விழா அமைதியாக கொண்டாட ஒத்துழைக்க வேண்டும். அரசு வகுத்துள்ள நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்க, கரைக்க வேண்டும்.