News October 20, 2024
கோர விபத்து: சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி

ராஜஸ்தானில் இன்று கோர விபத்து நிகழ்ந்தது. ஜெய்ப்பூரில் இருந்து 50 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று டோல்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. டோல்பூர் அருகே அதிகாலை வந்த போது, எதிரே வந்த டெம்போ வேனுடன் பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News July 6, 2025
தூத்துக்குடியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திருவிழாவையொட்டி நாளை(ஜூலை 7) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும். இதனால், மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் நாளை இயங்காது. குடமுழுக்கு விழாவையொட்டி சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். TNSTC சிறப்பு பஸ்களையும் அறிவித்துள்ளது.
News July 6, 2025
‘கில்’ இந்தி பட ரிமேக்கில் துருவ் விக்ரம்!

‘பைசன்’ படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் இந்தியில் வெளிவந்து பெரிய ஹிட்டடித்த ‘கில்’ படத்தின் ரிமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா என்பவர் இயக்க இருக்கிறார். ஒரு நாள் இரவில், ரயில் ஒன்றில் கொள்ளையர்களிடம் இருந்து ராணுவ அதிகாரி ஒருவர் பயணிகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.
News July 6, 2025
7 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுது: IMD

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?