News October 20, 2024
8 வழிச்சாலையாகும் சென்னை – திருச்சி நெடுஞ்சாலை

சென்னை – திருச்சி நெடுஞ்சாலையை அதிவேக 8 வழிச்சாலையாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாகன பெருக்கம், நெரிசல், சாலை விபத்துகள், பயண நேரம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 310 கி.மீ. தொலைவை 6 மணி நேரத்திற்கு பதிலாக 4 மணி நேரத்திலேயே கடக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கான பணிகள் 2025 மத்தியில் தொடங்குகிறதாம்.
Similar News
News July 6, 2025
அமெரிக்க சுதந்திரத்தை மீட்க… கட்சி ஆரம்பித்த மஸ்க்!

அதிபர் டிரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் ‘அமெரிக்கா கட்சி’ (America Party) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் நோக்கம் என மஸ்க் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
News July 6, 2025
ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்தால்.. தீராத கடனும் தீரும்!

சூரியன் உதிக்கும் முன்பே குளித்து, பூஜைக்கு தயாராக வேண்டும். அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள், ஏதேனும் ஒரு பழம் போன்றவற்றை வைத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். பிறகு ஒரு இனிப்பு வகையை சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் சாப்பாட்டை தவிர்த்து மாலையில் விரதத்தை முடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில், வீட்டில் பிரச்னைகள் குறைந்து, செல்வம் பெருகி, தீராத கடனும் தீரும்.
News July 6, 2025
கமல்ஹாசனுக்கு அதிரடி தடை: கர்நாடக கோர்ட்

இனி கன்னட மொழி, கலாசாரம், இலக்கியம் குறித்துப் பேச நடிகர் கமல்ஹாசனுக்கு பெங்களூரு கோர்ட் தடை விதித்துள்ளது. தக் லைஃப் பட புரமோசனின்போது தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என பேச அது சர்ச்சையானது. இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்புகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் விளைவாக, கமல் இனி கன்னட மொழி குறித்து பேசக் கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.