News October 20, 2024

இளைஞர்களை குறிவைத்து இணைய வழியில் மோசடி

image

புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளதாவது, இணைய வழியில் இளைஞர்களை குறி வைத்து மசாஜ் மையங்கள் போன்ற தகவல்கள் மோசடியாளர்களால் கையாளப்படுகின்றன. ஆகவே, பணத்தை செலுத்தி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். அத்துடன், மோசடிக் கும்பலால் பாதிக்கப்படுவோர் பயப்படாமல் புகாரளிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Similar News

News July 10, 2025

புதுவை: ஆசிரியர் பட்டய படிப்புக்கு நேரடி சேர்க்கை

image

புதுவை மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பில் காலியாக உள்ள இடங்கள் நேரடி சேர்க்கை மூலம் நாளை (ஜூலை 10) நிரப்பப்படவுள்ளது. இப்பட்டயப் படிப்பில் சேர விரும்புவோர் +2 தேர்வில் 50% சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் புதுவை லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News July 10, 2025

ஆட்டோ ஓட்டுநரை கட்டையால் தாக்கிய பெண்கள்

image

ராசு உடையார் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நாராயணன் (42). இவரது மனைவி வள்ளி மணக்குள விநாயகர் கோயில் அருகே பூக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், வள்ளி கடை அருகே அமுதா என்பவர் புதிதாக பூக்கடை வைத்துள்ளார். இதனால் அமுதாவுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அமுதாவும், அவருக்கு ஆதரவாக சந்தியா என்பவரும் மரக்கட்டையால் நாராயணனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

News July 9, 2025

புதுவை: உண்ணாவிரதத்தை முடித்த சட்டமன்ற உறுப்பினர்

image

புதுச்சேரி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு ராஜினாமா கடிதத்துடன் கூடிய கோரிக்கை கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் இன்று (ஜூலை 9) வழங்கினார். மேலும் எம்எல்ஏ காலை முதல் சட்டசபையில் வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் அவருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர், ரமேஷ் உள்ளிட்டோர் முடித்து வைத்தனர்.

error: Content is protected !!