News October 20, 2024
இளைஞர்களை குறிவைத்து இணைய வழியில் மோசடி

புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளதாவது, இணைய வழியில் இளைஞர்களை குறி வைத்து மசாஜ் மையங்கள் போன்ற தகவல்கள் மோசடியாளர்களால் கையாளப்படுகின்றன. ஆகவே, பணத்தை செலுத்தி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். அத்துடன், மோசடிக் கும்பலால் பாதிக்கப்படுவோர் பயப்படாமல் புகாரளிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
புதுவையில் ஆசிரியர் தற்கொலை; போலீசார் விசாரணை

புதுவை மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால், விரக்தியடைந்த அவர் விசம் குடித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 14, 2025
புதுச்சேரி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற செப்.21ம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை, தேர்வர்கள் <
News September 14, 2025
புதுவை: கடுமையான வயிற்று வலியால் தற்கொலை

புதுவை, கூடப்பாக்கம்பேட் கோபால் (65) இவருக்கு 3 வாரமாக கடுமையான வயிற்று வலி இருந்தது அவர் மகன் கோவிந்தன் அவரை சிகிச்சைக்கு மருத்துவமனை அழைத்து சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று கோவிந்தன் வேலைக்கு சென்ற நேரத்தில் வயிற்று வலியால் விரக்தியடைந்த கோபால் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த கோவிந்தன் அளித்த புகாரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.