News March 18, 2024

BREAKING: எஸ்பிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

image

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால் எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கமளித்துள்ளது.

Similar News

News August 18, 2025

4 ஆண்டுகளில் முடியாதது, 7 மாதங்களில் முடியமா? இபிஎஸ்

image

கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என்றும், ₹5.38 லட்சம் கடன் திமுக அரசு வைத்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை 45 நாள்களில் தீர்க்கப்படும் என்கின்றனர். 4 ஆண்டுகளில் முடியாததை 7 மாதங்களில் நிறைவேற்ற முடியமா என கேட்டார். மக்களின் ஆசையை தூண்டி வாக்குகள் பெறவே இத்திட்டம் என்றார்.

News August 18, 2025

1 கோடி கையெழுத்து இயக்கம்: செல்வப்பெருந்தகை

image

தேர்தல் ஆணையத்தை (ECI) வைத்து பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., குற்றஞ்சாட்டியது. ECI, ஒரு தன்னாட்சி அமைப்பு என தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்தார். இதனிடையே, ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ ராகுல் காந்தி தொடங்கினார். இந்நிலையில், ECI முறை​கேடு தொடர்பாக ​மக்களிடம் விழிப்​புணர்வு ஏற்படுத்துவதற்காக, 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்​தப்​படும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

News August 18, 2025

SPORTS ROUNDUP: இந்திய அணியில் சுனில் சேத்ரி இல்லை!

image

◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் இரட்டையரில் பிரிவில் ராஜீவ் ராம்(USA)- நிகோலா மெக்டிக்(குரோஷியா) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
◆T20 பேட்டிங்கில் பாபர் அசாம் முன்னேற்றம் காண வேண்டி இருப்பதால், Asia Cup-ல் இடம் கிடைக்கவில்லை: PAK பயிற்சியாளர்.
◆தமிழ்நாடு கிரிக்கெட் அகாடமி நடத்தும் புச்சிபாபு தொடர் இன்று தொடங்குகிறது.
◆நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: இந்திய அணியில் சுனில் சேத்ரிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

error: Content is protected !!