News March 18, 2024
BREAKING: எஸ்பிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால் எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கமளித்துள்ளது.
Similar News
News October 31, 2025
விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்

விஷாலின் ‘மகுடம்’ படப்பிடிப்பு தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து இயக்குநர் ரவி அரசு விலகிய நிலையில், இயக்கும் பணியை விஷால் கையிலெடுத்தார். இந்நிலையில், இயக்குநர் சங்கமும், FEFSI அமைப்பும் சேர்ந்து படப்பிடிப்பை நிறுத்தியுள்ளது. ரவி அரசுவிடம் இருந்து தடையில்லா சான்று (NOC) பெறாமல் படத்தை விஷால் இயக்க கூடாது என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
News October 31, 2025
இரவில் நீண்ட நேரம் போன் யூஸ் பண்ணும் ஆண்களே.. உஷார்!

மாலை & இரவில் நீண்டநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு விந்தணுக்களின் எண்ணிக்கை, செயல்திறன் & ஆயுளை பாதித்து, விந்தணுக்களின் DNA-ல் பாதிப்பையும் ஏற்படுத்துகிறதாம். இந்தியாவில் 23% ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உள்ளதாக WHO கூறுகிறது. ஆண்களே, போன் பயன்படுத்துவதை கொஞ்சம் குறைக்கலாமே!
News October 31, 2025
குழந்தைகளின் உடல்நலனுக்கு 5-2-1-0 ஃபார்முலா

குழந்தைகளின் உடல்நலனுக்கு 5-2-1-0 ஃபார்முலாவை பின்பற்றுவது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.*0 என்றால் தண்ணீர் அல்லது பால் தவிர வேறு பானங்களை அருந்தக் கூடாது. *தினமும் 1 மணி நேரமாவது குழந்தைகள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். *2 மணி நேரத்திற்கும் குறைவாக எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்பாடு. *தினமும் 5 வகையான காய்கறிகள் அல்லது பழங்கள் சாப்பிட்டால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.


