News March 18, 2024

BREAKING: எஸ்பிஐ மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி

image

தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால் எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கமளித்துள்ளது.

Similar News

News April 20, 2025

ஜம்மு – காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

image

ஜம்மு – காஷ்மீரில் 3.1 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தஜிகிஸ்தான் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்தனர். அண்மை காலமாக ஆசிய கண்டத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

News April 20, 2025

ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வீரர்கள்..!

image

ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் களமிறங்கி கவனம் பெற்றிருக்கிறார் RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி (14 ஆண்டு 23 நாள்கள்). இந்த பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக பிரியாஸ் (16 ஆண்டுகள் 157 நாள்கள்), முஜிப் உர் ரஹ்மான் (17 ஆண்டுகள் 11 நாள்கள்), ரியான் பராக் (17 ஆண்டுகள் 152 நாள்கள்), சர்ஃபராஸ் கான் (17 ஆண்டுகள் 177 நாள்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். 14 வயதில் நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

News April 20, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 311 ▶குறள்: சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். ▶பொருள்: மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும், அதன் பொருட்டுப் பிறருக்கு கேடு செய்யாமல் இருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

error: Content is protected !!