News October 20, 2024
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று வயது 39

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்துடன் இருந்த தூத்துக்குடி மாவட்டம் 1986ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தனி மாவட்டமாக உதயமானது. அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தூத்துக்குடி மாவட்டத்தை துவக்கி வைத்து அதற்கு வ.உ சிதம்பரனார் மாவட்டம் என்று பெயர் சூட்டினார். அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தூத்துக்குடி மாவட்டமாக பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது.
Similar News
News July 10, 2025
தூத்துக்குடி: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 10, 2025
குறும்பட போட்டி.. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு

தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC) 2025ம் ஆண்டிற்கான 11வது குறும்பட போட்டியை அறிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் எந்த மொழியிலும் (ஆங்கில வசனங்களுடன்) 3-10 நிமிட குறும்படங்களை ஆகஸ்டு 31, 2025க்குள் nhrcshortfilm@gmail.com-க்கு அனுப்பலாம். முதல் மூன்று பரிசுகளாக ரூ.2 லட்சம், ரூ.1,50,000, ரூ.1,00,000, சிறப்பு பரிசாக ரூ.50,000 வழங்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க
News July 10, 2025
தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் எண்ணான 95141 44100-ஐ தொடர்பு கொள்ளலாம்.