News October 20, 2024
கள் விற்பனைக்கு தடை ஏன்? பனையேறிகள் கேள்வி

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் விழுப்புரம் சார்பாக, தமிழ்நாட்டில் கள் விற்பதற்கான தடையை நீக்க வேண்டும் என முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அரசு பதில் கடிதம் அனுப்பி உள்ளது. அதில், “தமிழகத்தில் கள் விற்க & இறக்க தடை இருப்பதால் இதனை ஏற்க முடியாது” எனக் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, தடை செய்வதற்கான அறிவியல் காரணங்களை அரசு கூற வேண்டும் என பனையேறிகள் கேட்டுள்ளனர்.
Similar News
News August 18, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின்தடை உள்ள பகுதிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம், காரணை பெரிச்சானுார், மதுரப்பாக்கம், கஞ்சனுார் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (ஆகஸ்ட் 19) காலை 9 மாலை 6 வரை வழுதாவூர், கெங்கராம்பாளையம், சித்தலம்பட்டு, கண்டாச்சிபுரம், குயிலாப்பாளையம், முகையூர், பரனூர், புதுப்பாளையம், பகண்டை, நெற்குணம், திருமங்கலம், கரைமேடு, நகரி, ஆலம்பாடி, ஓதியத்தூர், தொரவி ஆகிய இடங்களில் மின் தடை.
News August 18, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிங்கள்.
News August 18, 2025
விழுப்புரத்துல இது தாங்க செம்ம Famous

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு பிரபலமாக இருக்கும். அந்த வகையில் விழுப்புரம் என்றாலே அது முட்டை மிட்டாய் தான். இது ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. பால், முட்டை, சர்க்கரை, நெய் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் முட்டை மிட்டாய் கேக்-ஐ விட மென்மையாகவும் வாயில் வைத்தவுடன் கரையும் தன்மையுடனும் இருக்கும். விழுப்புரத்தில் இருந்து கொண்டு, இது வரை முட்டை முட்டையை சாப்பிடாத உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!