News October 20, 2024
சிறப்பு குறைதீர்வு முகாமில் 197 மனுக்களுக்கு உடனடி தீர்வு

வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுவிநியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்தது. முகாமில் மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 197 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 10 மனுக்கள் மட்டும் பரிசீலனையில் உள்ளன. முகாமில் அதிகபட்சமாக 77 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 66 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும் மனு அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶இந்த <
News July 11, 2025
ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள வேலூர் அதிகாரிகளை (0416-2232549, 0416-2223908) தொடர்பு கொள்ளுங்கள். <<17027997>>தொடர்ச்சி<<>>
News July 11, 2025
சென்னை – வேலூர் 1 மணி நேரத்தில் செல்லலாம்

சென்னை – வேலூருக்கு இடையே (140 கி.மீ.) RRTS ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ‘பாலாஜி ரயில் ரோடு’ என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 20 நிமிடத்திலும், வேலூருக்கு 1 மணி நேரத்திலும் பயணிக்கலாம். மெட்ரோவைவிட 3 மடங்கு அதாவது 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஷேர் பண்ணுங்க