News October 20, 2024
இன்றே கடைசி: ரயில்வேயில் 3,445 வேலை

ரயில்வேயில் காலியாக உள்ள 3,445 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், டிரைன்ஸ் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இது இன்றுடன் முடிகிறது. விருப்பமுள்ளோர் ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News July 5, 2025
திமுக மூத்த தலைவர் அய்யாவு காலமானார்

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரனின் சகோதரருமான அய்யாவு காலமானார். திமுகவில் தொண்டரணி தொடங்கியது முதலே Ex CM அண்ணாதுரையின் அனைத்து வெளியூர் பயணங்களிலும் உடன் இருந்தவர். அய்யாவு மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர். #RIP
News July 5, 2025
மாத சம்பளதாரர்களுக்கு… PF கணக்கில் வட்டி டெபாசிட்

PF கணக்கு வைத்திருக்கும் மாத சம்பளதாரர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை EPFO வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான வட்டித் தொகையை அது செலுத்தியுள்ளது. PF தொகைக்கு 8.25% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. 31/03/2025 தேதி வரைக்குமான வட்டி, உங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது பாஸ்புக்கில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் PF-க்கான வட்டி டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதா… உடனே செக் பண்ணுங்க.
News July 5, 2025
சுட்டெரிக்கும் வெயில்.. கவனம் தேவை மக்களே!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ள போதும், பிற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. மதுரை, மீனம்பாக்கம், நாகை, திருச்சி, வேலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டியுள்ளது. இந்நிலையில், வரும் நாள்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!