News October 20, 2024
போக்குவரத்து ஓய்வூதியர்கள் முதல்வருக்கு கடிதம்

போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.கதிரேசன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. வழக்கமாக 5ஆம் தேதி வழங்கப்படும் ஓய்வூதியத்தை தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும்.
Similar News
News July 10, 2025
மெரினா நீச்சல் குளம் 20 நாட்களுக்கு இயங்காது

மெரினா நீச்சல் குளம், தண்ணீர் சுத்திகரிப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக 20 நாட்கள் மூடப்படுகிறது. ஜூலை 11, 2025 முதல் ஜூலை 31, 2025 வரை (20 நாட்கள்) நீச்சல் குளம் இயங்காது. பைப் அமைத்தல், 180 மீ விட்டம் கொண்ட 9 புதிய ஊறுகுழிகள் பொருத்துதல், மற்றும் சோதனை வெள்ளோட்டம் உள்ளிட்ட பணிகள் தங்குதடையின்றி நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்தப் பணிகள் நீச்சல் குளத்தின் தரமான செயல்பாட்டிற்கு உதவும்.
News July 9, 2025
சென்னை உயர் நீதிமன்றம் ஐஏஎஸ் அதிகாரி மீது காட்டம்

சென்னை உயர் நீதிமன்றம், ராயபுரம் மண்டல அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் குறித்து நடவடிக்கை எடுக்காத சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனுக்கு ₹1 லட்சம் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஐஏஎஸ் அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவர் என்று தன்னை நினைத்துக் கொள்கிறாரா?” எனக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளது.
News July 9, 2025
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 17 வேலைவாய்ப்புகள்

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பில் 17 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.dcourts.gov.in/ ஐப் பார்வையிட்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம். இது குறித்த அறிவிப்பை சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.