News October 19, 2024
பென்னாகரம் சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த அப்சர் என்ற சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தனது தந்தைக்கு ஆதரவாக டீ கடையில் வேலை செய்து வந்துள்ளார். இச்செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சியர் மாணவனுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வழங்க நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், அவனது படிப்பிற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார்.
Similar News
News November 19, 2025
தருமபுரி: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு!

தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கற்பிக்கப்படுகிறது. இதில் சுகாதார ஆய்வாளர் பயிற்சிக்கு பொது சுகாதார திட்டம் என்ற பாடத்தை எடுக்க தகுதி வாய்ந்த மற்றும் அனுபவமிக்க அல்லது அனுபவம் மற்ற ஆசிரியர் தேவைப்படுவதாக மாவட்ட வேலைவாய்ப்பு திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு 8870075201 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
News November 19, 2025
தருமபுரி: கஞ்சா ஆசாமிகளை போலீசார் வலைவீசி பிடிப்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் சுடுகாடு அருகே நேற்று (நவ.19) போலீ சார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த தீப்பொறி (வயது 30) என்பதும், அவர் 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.
News November 19, 2025
தருமபுரியில் முத்தரப்பு கூட்டம் – ஆட்சியர் பங்கேற்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் இன்று (நவ.19) மாலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் கேழ்வரகு சாகுபடி செய்வது தொடர்பாக முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்றது. உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர் தணிகாசலம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) ரத்தினம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.


