News March 18, 2024

புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

image

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 1, 2026

புதுவை: போலி ரசீது மூலம் ரூ.87 லட்சம் கையாடல்?

image

அரியாங்குப்பம், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், கழிவறை கட்டுமான பணிகளில் ரூ.87 லட்சம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் 2022-ம் ஆண்டு அரியாங்குப்பம் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் அரசு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட கழிவறை திட்டத்தில் ரசீதுகள் மூலம் பணத்தை கையாடல் செய்ததாக புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

புதுவை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E., / B.Tech., / B.Sc.,
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

புதுவை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!