News March 18, 2024
புதுச்சேரியில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர செயல்பாட்டு மையத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டு பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் அளிப்பதற்கான கட்டணம் இல்லா தொலைபேசி 1950 (ம) சிவிஜிலி மூலம் புகார்கள் பெறப்படும் என்று தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
புதுச்சேரி: காவல் நிலையத்தில் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி சாலினிசிங் அறிவுறுத்தல் படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு குறைகளை தெரிவித்தனர் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
News September 6, 2025
வடிகால் வாய்க்காலை தூர்வார எம்எல்ஏ நடவடிக்கை

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ரங்கப் பிள்ளை வீதி அண்ணா சாலை இணைப்பு பகுதியில் தனியார் இணைப் பகுதியில் தனிதான் கட்டிட கழிவுகள் மழைநீர் வடிகால் வாய்க்காலில் கொட்டப்பட்டிருந்தது. இதனால் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தொற்று நோய் ஏற்பட்டது. இன்று எம்.எல்.ஏ. நேரு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து நோய் பரவாமல் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.
News September 6, 2025
புதுச்சேரி: ரூ.1,60,000 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

புதுச்சேரி மக்களே, இந்தியா முழுவதும் பொறியாளர்கள், அதிகாரிகள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு BE / B.Tech டிகிரி போதுமானது. சம்பளம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.09.2025 தேதிக்குள் <