News October 19, 2024
என்ன அக்கா ஏன் இவ்வளவு கோபம்: உதயநிதி

இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருவதாக தமிழிசையை உதயநிதி சாடியுள்ளார். மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் -ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. இந்திக்கு அக்கா வக்காலத்து வாங்குவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News July 5, 2025
பாமகவுக்கு பிரச்னைக்கு தீர்வு சொன்ன GK மணி!

ராமதாஸும், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்னைக்கு தீர்வு எட்டும் என GK மணி கூறியுள்ளார். இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்குவது, கருத்து கூறி வருவது தொடர்ந்தால் கட்சி நலிவு பெறும் என வேதனையுடன் கூறியுள்ளார். மேலும், பாமகவில் நிலவும் பிரச்னைக்கு எந்த கட்சியும் காரணமல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக திமுகவே காரணம் என அன்புமணி பேசியது கவனிக்கத்தக்கது.
News July 5, 2025
விரைவில் 7ஜி ரெயின்போ காலனி-2 டீசர்

இன்றைய இளைஞர்கள் மனதிலும் பதிந்த படம் தான் ‘7ஜி ரெயின்போ காலனி’. இதன் 2-ம் பாகம் உருவாகிவரும் நிலையில், ரவி கிருஷ்ணாவின் அண்ணனும், இயக்குநருமான ஜோதி கிருஷ்ணா அப்டேட் கொடுத்துள்ளார். யுவன் 3 பாடல்களுக்கு இசையமைத்து விட்டதாகக் கூறிய அவர், முதலில் டீசரை வெளியிட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இப்படத்தில் ‘குருவாயூர் அம்பலநடையில்’ நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.
News July 5, 2025
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானார்

மூத்த தமிழறிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) காலமானார். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை உள்ளிட்ட நூல்களை எழுதிய அவர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளை பதிப்பித்தவர். திமுகவின் பிரச்சார முழக்கமான ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம் என்ற கவிதையை நேற்று எழுதியபின் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.