News March 18, 2024
திமுக பிரமுகர் கொலையில் இளைஞர் சரண்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திக்கை (38) கடந்த 15ம் தேதி 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை விரோதம் காரணமாக நடந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பாகலூர் போலீசில் பிரதாப் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
கிருஷ்ணகிரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 5, 2025
கிருஷ்ணகிரியில் 150 பணியிடங்கள்; உடனே APPLY பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள 150 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. உரிய விண்ணப்பத்தை நிறைவு செய்து தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்துக்கு 17.12.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். ஷேர் IT.
News December 5, 2025
ஓசூர்: கண் இமைக்கும் நேரத்தில் திருட்டு.. ஒருவர் கைது

ஓசூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள டைட்டான் வாட்ச் ஷோரூம் இன் தங்கத்தால் ஆன வாட்ச் ஒன்று திருட்டுப் போனதாக தகவல் தெரிந்த நிலையில் அக்கடையில் உள்ள கேமராவில் காவலர்கள் சோதனை செய்தபோது சூடுகொண்டபள்ளியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் திருடி சென்றது தெரிந்து அவரை சிப்காட் போலீசார் கைது செய்து விசாரித்ததில் திருடியது உறுதி செய்து அவரிடமிருந்து வாட்ச்சை கைப்பற்றி ஷோரூமில் ஒப்படைத்தனர்.


